தமிழர்கள் கண்ணகி கோவிலில் 3 நாட்கள் வழிபட அனுமதிக்க வேண்டும்: உம்மன் சாண்டிக்கு வைகோ கடிதம்
சென்னை: தமிழக-கேரளா எல்லையில் உள்ள கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தமிழர்கள் 3 நாட்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேரளா முதல்வர் உம்மன்சாண்டிக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து மதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக எல்லையோரம் கம்பம், கூடலூர் கடந்து பளியங்குடி வனப்பகுதியில் சுமார் 6.6 கி.மீ. தொலைவிலும், குமுளியிலிருந்து சுமார் 14 கி.மீ. தொலைவிலும், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,380 அடி உயரத்தில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது.
மலை மீது உள்ள இக்கோவிலுக்குச் செல்ல கேரள அரசின் ஒப்புதல் பெற்ற ஜீப்புகள் மட்டுமே செல்ல இயலும். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்திரை மாதத்தில் பவுர்ணமியையொட்டி ஒருவார காலம் விழா நடத்துவது வழக்கமாகும்.
பின்னர் கேரள மாநில வனத்துறையின் கட்டுப்பாடுகளால் அந்த விழா மூன்று நாட்களாகக் குறைக்கப்பட்டு தற்போது ஒருநாள்மட்டுமே நடைபெறும் விழாவாகச் சுருங்கி விட்டது.
இந்த வருடம் சித்திரா பவுர்ணமி 21.04.2016 அன்று வருவதால் மங்கலதேவி கண்ணகி கோவிலில் வழிபட தமிழகத்திலிருந்து செல்லும் பக்தர்களை சித்திரா பவுர்ணமியான 21.04.2016 அன்று ஒருநாள் மட்டுமே கேரள அரசு அனுமதிக்கும் என்றும், இம்முறை தமிழ்நாட்டிலிருந்து தமிழக மக்கள் வழிபட அதிக எண்ணிக்கையில் கூடுவார்கள் என்பதால் மூன்று நாட்கள் சென்று வழிபாடு நடத்திட கேரள அரசிடம் அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்றும் மங்கலதேவி கண்ணகி கோவில் வழிபாட்டு மன்றத்தை நடத்திவரும் யாணன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படி வைகோ, கேரள மாநில முதலமைச்சர் உம்மன் சாண்டிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "மங்கலதேவி கண்ணகி கோவில் வழிபாடு செய்ய தமிழக மக்கள் வரும் சித்திரா பவுர்ணமி அன்று (21.04.2016) ஒருநாள் மட்டுமே வழிபாடு செய்ய அளிக்கப்படும் அனுமதிக்குப் பதிலாக ஏற்கனவே அனுமதி வழங்கியது போல தமிழக மக்கள் மூன்று நாட்கள் வழிபட அனுமதித்து உதவிட வேண்டுகிறேன் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு மதிமுக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications