ஆவின் பால் கொள்ளையன் அதிமுக வைத்தியநாதன் மனைவி ரேவதி விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்
விழுப்புரம்: ஆவின் பால் கலப்பட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் பிரமுகரான வைத்தியநாதனின் மனைவி ரேவதி விழுப்புரம் கோர்ட்டில் ஆஜரானார்.
திண்டிவனத்தை அடுத்த ஊரல் பகுதியில் நடந்த ஆவின் பால் கலப்படம் தொடர்பாக சென்னையை சேர்ந்த அதிமுக பிரமுகர் வைத்தியநாதன் உள்பட 19 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 19 பேரை தவிர வைத்தியநாதனின் மனைவி ரேவதி, பால் தர கட்டுப்பாட்டு மேலாளர் அப்துல்ரஹீம் ஆகியோரின் பெயரும், வைத்தியநாதன் நடத்தி வந்த சவுத் இந்தியா ரோடு மில்க் நிறுவனம், ரேவதி நடத்தி வந்த தீபிகா டிரான்ஸ்போர்ட் ஆகிய நிறுவனங்களின் பெயரும் சேர்க்கப்பட்டன.
இந்த நிலையில் முன் ஜாமீன் பெற்றிருந்த வைத்தியநாதனின் மனைவி ரேவதி, கோர்ட் விதித்த நிபந்தனையின் பேரில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி குமார் சரவணன் முன்னிலையில் நேற்று ஆஜராகி கையெழுத்திட்டுச் சென்றார்.












Click it and Unblock the Notifications