அப்படியெல்லாம் பேசக் கூடாது, நாகரீகமாக பேச வேண்டும்.. அரசியல்வாதிகளுக்கு வானதி சீனிவாசன் அட்வைஸ்
கோவை: அரசியலில் இருப்போர் நாகரீகமாக பேசக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவை தொண்டாமுத்தூர் அருகே தான் தத்தெடுத்துள்ள உலியம்பாளையம் கிராமத்திற்கு வருகை தந்த அவர் அங்கு மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், அரசியலில் நாகரீகமான பேச்சு அவசியம். காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் கருத்து பெண்கள் அனைவருக்கும் அரசியலில் பின்னடைவை தந்துள்ளது.
பூரண மது விலக்கு பற்றி பேசும் ஒவ்வொருவரும், முதலில் தாங்கள் அதனை பின்பற்றுகிறோமா என்று சிந்திக்க வேண்டும்.
தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, மது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
இது நான் பிறந்து வளர்ந்த கிராமம். இந்த கிராம வளர்ச்சிக்காக பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்ய உள்ளேன். கிராமத்தில் உள்ள 300 குடும்பங்களுக்கு இன்சூரன்ஸ் எடுத்து கொடுத்துள்ளேன்.
இப்பகுதியில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பேன் என்றார் என்றார்.












Click it and Unblock the Notifications