வாணியம்பாடி அருகே கோரம்.. தீபாவளிக்கு ஊருக்கு சென்றவர்கள் விபத்தில் சிக்கி 6 பேர் பலி! 20 பேர் காயம்!
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரு பேருந்துகள் மோதியதில் விபத்து ஏற்பட்டு 6 பேர் பலியாகிவிட்டனர்.
பெங்களூரிலிருந்து வந்த அரசு பேருந்தும் எதிரே வந்த தனியார் நிறுவனத்தின் ஆம்னி சொகுசு பேருந்தும் மோதி கொண்டது. இந்த விபத்தில் 6 பேர் பலியாகிவிட்டனர்.

மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்களில் 5 பேர் ஆண்கள் ஒரு பெண் ஆவார். பெங்களூரில் இருந்து வந்த அரசு பேருந்து வாணியம்பாடி அருகே செட்டியப்பனூரில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவற்றை உடைத்துக் கொண்டு சென்றது. அப்போது வாணியம்பாடி அருகே சென்னையிலிருந்து பெங்களூருக்கு வந்து கொண்டிருந்த சொகுசு பேருந்து மீது அரசு பேருந்து மோதியது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் தீபாவளி சொந்த ஊர் சென்றவர்கள் ஊர் போய் சேரும் நேரமும் அதிகரித்தது.
விபத்து குறித்து வாணியம்பாடி போலீஸார் விசாரித்து வருகிறார்கள். இந்த பேருந்துகளில் பயணம் செய்தவர்கள் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்களாக இருக்கலாம் என தெரிகிறது. கிருத்திகா, முகமது பைரோஸ், அஜித், ஓட்டுநர் ஏழுமலை, சையது நதீம், ராஜீவ் ஆகிய 6 பேர் பலியாகிவிட்டனர்.












Click it and Unblock the Notifications