For Daily Alerts
Just In
ரூ. 18,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது
சுரண்டை: நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே பட்டா பெயர் மாற்றத்திற்காக வந்தவரிடம் ரூ. 18,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார்.
சுரண்டை அருகே உள்ளது சிவகுருநாதபுரம். இங்கு கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் கணேசன். இவரிடம் ஒருவர் பட்டா பெயர் மாற்றத்திற்காக வந்திருந்தார். அவரிடம் லஞ்சம் தருமாறு பேரம் பேசியுள்ளார்.
இதையடுத்து அந்த நபர் லஞ்ச ஒழிப்புப் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து டி.எஸ்.பி. தங்கசாமி தலைமையிலான படையினர் மாறு வேடத்தில் மறைந்து நிற்க கணேசனிடம், புகார்தாரர் ரூ. 18,000 பணத்தை லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது போலீஸார் கணேசனை கையும் களவுமாக பிடித்துக் கைது செய்தனர்.
English summary
Surandai VAO Ganesan was arrested for accepting bribe today
Story first published: Friday, September 20, 2013, 16:39 [IST]