மதுரை "டான்" வரிச்சியூர் செல்வம் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது!
மதுரை: குற்றச்செயல்களில் தொடர்புடைய மதுரையைச் சேர்ந்த பிரபல தாதா வரிச்சியூர் செல்வம் உட்பட 5 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுதொடர்பான உத்தரவை பிறப்பித்த மதுரை மாநகர காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர், மாநில பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, வரிச்சியூரைச் சேர்ந்த செல்வம், செந்தில், சுப்பிரமணி, தேனியைச் சேர்ந்த பார்த்திபன், மதுரை களிமங்கலத்தைச் சேர்ந்த ரூபேஸ்தீன் பாவா ஆகியோர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேபோன்று, மதுரை செல்லூரைச் சேர்ந்த பாண்டித்துரை, குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் மதுரை அண்ணாநகர் கிழக்குத் தெரு சாலையில் மாநகராட்சிக் குப்பைத் தொட்டியில் 11 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
மதுரை இஸ்மாயில்புரம் பகுதியைச் சேர்ந்த கீரைமணி என்ற மணிமாறன் குப்பைத் தொட்டியில் குண்டுகளை வீசியதாகவும், இதில் சில ரவுடிகளுக்குத் தொடர்பு இருப்பதாகவும் போலீஸார் கூறினர். நாட்டு வெடிகுண்டுகள் மீட்கப்பட்டது குறித்து மத்திய பாதுகாப்பு புலனாய்வுத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், பிரபல ரவுடியான வரிச்சியூர் செல்வம் (45), அவரது கார் ஓட்டுநர் பார்த்திபன் (38) ஆகியோர் மதுரை மாவட்ட 6-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நவம்பர் 12ஆம் தேதி சரணடைந்தனர். இதனையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். வரிச்சியூர் செல்வம், கொலை, கொலை முயற்சி, பணம் பறித்தல் உள்பட சுமார் 25 வழக்குகளில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications