தமிழுக்காக குரல் கொடுக்கும் உ.பி. தருண் விஜய்... தப்புத் தப்பாய் தமிழை எழுதும் வாசன் காங்கிரஸ்!
சென்னை: தமிழுக்காக இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட பாஜகவின் தருண் விஜய் தீவிரமாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். மறுபக்கம் தமிழகத்து அரசியல்வாதிகளோ, தமிழையே தப்புத் தப்பாய் எழுதியும், பேசியும் கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
ல, ள, ழ வித்தியாசம் தெரியாமல் பேசுவோர் தமிழகத்தில் அதிகம்தான். அது பழக்கத்தில் வருவது. குறை சொல்லவும் முடியாது. ஆனால் தப்புதான். சாதாரண ஜனங்கள் பேசினால் பரவாயில்லை. ஆனால் அரசியல்வாதிகளும் தமிழைத் தப்புத் தப்பாக பேசினால் எப்படி..!
இப்படித்தான் சென்னையில் ஒரு தமிழ்க் கொலையை சமீபத்தில் பார்க்க முடிந்தது.

வாசமில்லாத காங்கிரஸ்
ஜி.கே.வாசன் ஒரு கட்சியைத் தொடங்கவுள்ளார். இதற்காக தீவிரமாக ஆதரவு சேர்த்து வருகிறார்கள்.

தம்பிக்கு எங்கள் ஆதரவு
ஜி.கே.வாசன் வீட்டுக்குத் தினசரி அவரது ஆதரவாளர்கள் படை படையாக வந்து ஆதரவைத் தெரி்வித்தவண்ணம் உள்ளனர்.

மகளிர் காங்கிரஸ்
அதேபோல மகளிர் காங்கிரஸ் தொண்டர்களும் கூட்டமாக வந்து வாசனை வாழ்த்தும் நிகழ்ச்சி நடந்தது.

பேனரில் இருப்பது என்ன?
இவர்கள் மகளிர் காங்கிரஸ் என்ற பேனருடன் வந்து வாசனை வாழ்த்தினர். பின்னர் வாசன் அவர்கள் மத்தியில் பேசினார். அவருக்குப் பின்னால் மகளிர் காங்கிரஸ் என்ற பேனர் கட்டப்பட்டிருந்தது.

வளமான தமிழகம்..!
அந்த பேனரில் வளமான தமிழகம் என்ற வரி மேலே இருந்தது. அதில் தவறு இல்லை. அடுத்த வரிதான் இடித்தது.

"வளி"மையான பாரதம்
அதாவது வளிமையான பாரதம் என்று போட்டிருந்தனர். அது என்ன "வளி"மையான பாரதம் என்று தெரியவில்லை. "வலி" க்கு வலி எடுக்கும் அளவுக்கு ரொம்ப அழுத்திப் போட்டிருந்தனர் அந்த வார்த்தையை.

ஒரு வேளை இப்படி இருக்குமோ...!
ஒரு வேளை, வளிமண்டலத்தையும் தாண்டி பாரதத்தை வலிமையாக்கப் போகிறோம் என்பதைச் சொல்லாமல் சொன்னார்களா என்றும் தெரியவில்லை.

வெட்கப்பட வேண்டும்
இந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட உ.பி மாநில எம்.பியான தருண் விஜய் தமிழ் தமிழ் என்று மூச்சுக்கு 300 முறை கூறி வருகிறார், பேசி வருகிறார், வாதாடி வருகிறார். ஆனால் "தமிழ்த் தாத்தா" மூப்பனாரின் வாரிசுக்கு ஆதரவு தெரிவிப்போர் இப்படித் தமிழைத் தாறுமாறாக கிழித்து தோரணம் தொங்க விடுவது கொடுமைதான்.

கழகத்தின் பாோர்"வாலே"...!
இதேபோல சமீபத்தில் ஒரு சுவர் விளம்பரத்தைப் பார்க்க நேர்ந்தது. அதில், மு.க.ஸ்டாலின் படத்தை வரைந்து, அருகில் கழகத்தின் போர்வாலே என்று போட்டு பீதி ஏற்படுத்தியிருந்தனர் சில உடன் பிறப்புகள்.












Click it and Unblock the Notifications