டெங்குவைக் கட்டுப்பாடுத்தாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து அக்.11-ல் போராட்டம்: திருமாவளவன்
தமிழகத்தில் பரவி வரும் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து அக்டோபர் 11-ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன்
சென்னை: தமிழ்நாட்டில் பரவி வரும் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து அக்டோபர் 11-ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.
டெங்குக் காய்ச்சலுக்கு தமிழகம் முழுவதும் சிறியவர் முதல் பெரியவர் வரை பலர் தினம் தினம் பலியாகி வருகின்றனர். இந்நிலையில், டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மாவட்ட தலைநகர்களில் கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டம் நடத்த உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் டெங்குக் காய்ச்சலுக்கு தினம் சராசரியாக பத்து பேர் பலியாகி வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் 500க்கும் மேற்பட்டவர்கள் டெங்குக் காய்ச்சலுக்கு பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தமிழக அரசு டெங்குக் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியது மட்டுமில்லாமல் டெங்குவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டி உண்மையை மூடி மறைத்து வருகிறது.
தமிழக அரசின் இந்த போக்கைக் கண்டித்தும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் டெங்குவுக்கும் சிகிச்சை அளிக்க வலியுறுத்தியும் வரும் புதன்கிழமை, அக்டோபர் 11ஆம் தேதி, மாவட்ட தலைநகர்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அகூறியுள்ளார்.