For Daily Alerts
Just In
அதிமுக அமைச்சர்கள் ஜெ.வுக்கு துரோகம் செய்கின்றனர் - தொல். திருமா தாக்கு : வீடியோ
அதிமுக அமைச்சர்கள் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்கின்றனர் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
திருச்சி: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து அதிமுக அமைச்சர்கள் மாற்றி மாற்றி பேசுவது அவருக்கு செய்யும் துரோகம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், அதிமுக அமைச்சர்கள் ஜெயலலிதா மரணம் குறித்து மாற்றி மாற்றிப் பேசி வருகிறார்கள்.
இது, ஜெயலலிதாவுக்கு அவர்கள் செய்யும் துரோகம். ஜெயலலிதா அரும்பாடு பட்டு, ஆட்சியை கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார் என்பதை அதிமுக அமைச்சர்கள் மறப்பது நல்லது அல்ல.
அதேபோல், ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் ஆறு மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தொல். திருமாவளவன் கூறினார்.
English summary
Inquiry commission of Jayalalitha, should submit the report with in six month said VCK lEader Thol. Thirumavalavan.