காஞ்சிபுரம் அருகே விசிக நிர்வாகி பெண் தொடர்பால் மர்ம மரணம்?
காஞ்சிபுரம் அருகே பெண் ஒருவரது வீட்டில் வி.சி.க கட்சி நிர்வாகி ரவிக்குமாரின் பிணத்தை போலீஸார் மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம் : வண்டலூர் அருகே காட்டாங்கொளத்தூர் அருகே பெண் ஒருவரது வீட்டில் பிணமாகக் கிடந்த வி.சி.க நிர்வாகியின் உடலை கைப்பற்றி போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைகழக ஊழியராக பணியாற்றி வந்த ரவிக்குமார், காஞ்சிபுரம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர் அணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார்.

ரவிக்குமாரின் மனைவி கவுரி. இவர் காஞ்சிபுரத்தை அடுத்த நந்திவரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு ஊழியராக பணி புரிந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்றனர். நேற்று முன்தினம் மாலை கவுரி வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது கணபதி நகரில் உள்ள மைதிலி என்பவரது வீட்டில் தனது கணவர் ரவிக்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து மறைமலை நகர் போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். அங்கு, தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்த ரவிக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் ரவிக்குமாரின் மனைவி கவுரி மற்றும் உறவினர்கள் இருநூறுக்கும் மேற்பட்டோர் ரவிக்குமாரின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மறைமலைநகர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications