சென்னை சேப்பாக்கம் மைதானப் பகுதியில் பதற்றம்... விசிக, த.வா.கட்சியினர் போராட்டம்!
ஐபிஎல் போட்டியை நடத்தக்கூடாது என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானம் இருக்கும் பகுதியை நோக்கி விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
பல்வேறு எதிர்ப்புகளை மீறி சென்னை சேப்பாக்கத்தில் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டி இன்று நடக்கிறது. இதற்காக கிரிக்கெட் வீரர்கள் பேருந்து மூலம் ஆழ்வார்பேட்டை விடுதியில் இருந்து சேப்பாக்கம் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஐபிஎல் விளையாட்டிற்கான நேரம் நெருங்கி வர நெருங்கி வர சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளில் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் இருந்து சேப்பாக்கம் நோக்கி பேரணியாக செல்ல விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முயற்சித்தனர். அவர்களை போலீசார் வாலாஜா சாலை அருகே தடுத்து நிறுத்தியதால் மைதானத்தை முற்றுகையிட வந்தவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை கலைந்து செல்ல போலீசார் வலியுறுத்தியும் அவர்கள் ஒத்துழைக்காததால் போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
இதே போன்று அண்ணா சாலை பகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கைகளில் கருப்பு பலூனுடன் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட வந்தனர். ஐபிஎல் போட்டிகள் வேண்டாம் என்று வலியுறத்தும் வாசகங்கள் அச்சிடப்பட்ட பலூன்களை கையில் வைத்துக் கொண்டு அதனை பறக்க விட முயன்றனர். சேப்பாக்கம் மைதானத்தை நோக்கி செல்ல போலீசார் அனுமதி மறுத்ததால் அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்காமல் இருப்பதற்காக மறியலில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications