வேலூர் சிறை நிர்வாகம் நற்சான்று வழங்கியது.. பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் விரைவில் விடுதலை?
வேலூர்: நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரின் சிறை நடவடிக்கைகளும் நன்றாக இருப்பதாக வேலூர் சிறை நிர்வாகம் நற்சான்று வழங்கி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடபாக மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒரு கடிதம் அனுப்பி இருந்தது. அதற்கும் மத்திய அரசு தற்போது, 'இதை நாங்கள் பரிசீலிப்போம்' என்று பதில் கடிதம் அனுப்பி உள்ளது.

இது நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது. சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் அதிமுக நாடகமாடுவதாகவும் எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் நளினி, பேரறிவாளன் மற்றும் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேரும் எந்த நேரமும் விடுவிக்கப்படலாம் என்றும், முருகன் உள்ளிட்ட மீதமுள்ள 4 பேர் அகதிகள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட இருப்பதாகவும் வெள்ளிக்கிழயன்று தகவல் வெளியானது.
மேலும், நளினி, பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞரான புகழேந்திக்கு இது தொடர்பாக சிறை நிர்வாகத்திடம் இருந்து, நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலை தொடர்பான சம்பிரதாய நடவடிக்கைகளுக்காக வேலூர் சிறைக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, முருகன் உள்ளிட்டவர்களின் சிறை நடவடிக்கைகள் மிகவும் நன்றாக உள்ளது என்று தமிழக அரசுக்கு சிறை நிர்வாகம் நற்சான்று கொடுத்து கடிதம் அனுப்பி உள்ளது.
7 பேரையும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432 பிரின் கீழ் விடுதலை செய்ய ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் என்பதால், 161-வது சட்டப் பிரிவை பயன்படுத்தி இவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
அதற்கான உதாரணம் தான் இந்த சிறைத்துறையின் நற்சான்று நடவடிக்கை என்று கூறப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டாலும், அரசமைப்புச் சட்டம் 161- ஐ பயன்படுத்தி விடுதலை செய்யும் நடவடிக்கையை எந்தவகையிலும் பாதிக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனென்றால் நளினி, பேரறிவாளன் ஆகியோர் ஒரு மாதம் பரோல் கேட்டபோது, இதே சிறை நிர்வாகம் அவர்களுக்கு நற்சான்று வழங்கவில்லை. ஆனால் தற்போது வழங்கி தமிழக அரசிடம் அதை சமர்பித்துள்ளது. தற்போது நற்சான்று அளிக்கப்பட்டு விட்டதால், கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இவர்கள் 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேரறிவாளன் நம்பிக்கை
இதனிடையே சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், 7 விடுதலை தொடர்பாக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றி கருத்து கூறியுள்ளார். வழக்கறிஞர்கள் மூலம் செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன், ''எங்களுக்கு வரும் செய்திகள் அனைத்தும் மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக உள்ளன. எங்கள் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் செயல்பாடுகள் மிக சிறப்பாக உள்ளது. எங்களை விடுதலை செய்தால் தமிழக அரசுக்கு நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருப்போம்" என்று கூறியுள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications