என்னை கொல்ல கூலிப்படையை ஏவிவிட்டுள்ள ராமதாஸ், அன்புமணி... பண்ருட்டி வேல்முருகன் பகீர் புகார்
நெய்வேலி: தம்மை கொல்ல பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கூலிப்படையை ஏவியுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

கடலூர் மாவட்ட பா.ம.க. செயலராக இருப்பவர் ஆறுமுகம். இவர் மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தம் மீதான தாக்குதலுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், அவரது சகோதரர்கள் திருமால்வளவன், கண்ணன் உள்ளிட்டோர் காரணம் என போலீசில் ஆறுமுகம் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து வேல்முருகன், அவரது சகோதரர்கள் உட்பட 50 பேர் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்தது.

பின்னர் வேல்முருகனின் சகோதரர் திருமால்வளவன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், பாமகவில் இருந்து விலகிச் சென்ற பலரும் கட்சி நடத்த முடியாமல் காணாமல் போய்விட்டனர்.
அதேபோல் வன்னியர் சங்கத்தின் பெயரால் ராமதாஸுக்கு எதிராக புகார் கூறியவர்களும் நிலைத்து நிற்கவில்லை. ஆனால் பாமகவைவிட்டு வெளியேறி கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தின் நலனுக்காக போராடி வருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. இதனை பாமகவால் குறிப்பாக ராமதாஸ், அன்புமணியால் ஜீரணிக்க முடியவில்லை.
இதனால்தான் சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் என்னை கொலை செய்ய பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ், காடுவெட்டி குரு ஆகியோர் கூலிப்படையை ஏவிவிட்டுள்ளனர். எங்கள் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தும் பாமகவினர் மீது புகார் கொடுத்தால் காவல்துறையினர் உடனே நடவடிக்கை எடுப்பதில்லை.

ஆனால் பாமகவினர் புகார் கொடுத்த உடனேயே நடவடிக்கை எடுக்கிறது காவல்துறை. அந்த அளவுக்கு காவல்துறையினர் பாமகவினரின் எடுபிடியாக செயல்படுகின்றனர் என்றார்.
செல்போன் டவர் போராட்டம்
இதனிடையே கடலூர், காஞ்சிபுரம், சேலம், தஞ்சாவூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்களில் வேல்முருகன், அவரது சகோதரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட புகாரை திரும்பப் பெறக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் செல்போன் டவர்கள் மீது ஏறி நின்று போராட்டம் நடத்தினர்.
அடுத்தடுத்த இந்த சம்பவங்களால் கடலூர் மாவட்டத்தில் பதற்றமான நிலைமை நீடித்து வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications