Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் மாணவர்கள் மீது போலீஸ் கொடூர தடியடி- வேல்முருகன் கடும் கண்டனம்

சென்னையில் ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியுள்ளனர். இதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி போராடிய மாணவர்கள் மீது போலீசார் கொடூர தடியடி நடத்தியுள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக பல லட்சம் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களின் அமைதிவழி கிளர்ச்சி பெருநெருப்பாக பற்றி எரிந்து வருகிறது.

Velmurugan condemns police lathicharge

இந்த நிலையில் சென்னை பழைய மகாபலிபுரம் சாலையிலும் (ஓஎம்ஆர்) மாணவர்கள், இளைஞர்கள் பெருந்திரளாக இன்று திரண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியது.

இதையடுத்து மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர் படுகாயமடைந்தனர். இத்தடியடியால் நாலாபுறமும் மாணவர்கள், இளைஞர்கள் சிதறி ஓடினர். அப்பகுதியே போர்க்களமாக இருக்கிறது.

இந்த தடியடிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். அலங்காநல்லூரில் இதேபோல் தடியடி நடத்தியதால் இப்போது தமிழகம் போர்க்களமாக இருக்கிறது. இத்தகைய தடியடி, கைது நடவடிக்கைகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்றார் வேல்முருகன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+