காவிரி விவகாரத்தில் காலம் தாழ்த்தினால் போராட்டம் தொடரும்: வேல்முருகன் எச்சரிக்கை
காவிரி விவகாரத்தில் அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு: காவிரி விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியாக போராட்டம் நடத்தினால் அதற்கு அனைத்து கட்சிகளும் துணை நிற்போம் என்றும் ஆனால் காலம் தாழ்த்தினால் தமிழகத்தில் போராட்டம் தொடரும் எனவும் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.
44 ஆண்டுகளாக சட்ட போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு சட்ட ரீதியாக போராட்டம் நடத்தினால் அனைத்து கட்சிகளும் துணை நிற்போம். காலம் தாழ்த்தினால் போராட்டம் தொடரும்.

பாலைவனமாகிவரும் தஞ்சை
காவிரியை வைத்து தான் தேர்தல் அரசியல் நடத்துகிறோம் என தமிழக பாஜக தலைவர் கூறும் அளவிற்கு தமிழக அரசு அலட்சியமாக உள்ளது. பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பின்பு ஆயிரத்து 600 விவசாயிகள் இறந்து உள்ளனர். தஞ்சை பாலவைனமாக மாறி வருகிறது. மீத்தேன், ஈத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம், நியூட்ரினோ திட்டம், பெட்ரோலிய மண்டலம் என பல்வேறு திட்டங்களால் தமிழகம் கடுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு அநீதி
14ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து கர்நாடகா அணையில் இருந்து தேவைப்பட்டால் ராணுவ உதவியுடன் தண்ணீர் திறக்க வேண்டும். 28 லட்சம் ஏக்கர் விளை நிலங்களுக்கு 177 டி.எம்.சி தண்ணீரும், 6 லட்சம் ஏக்கர் மட்டுமே உள்ள கர்நாடகாவிற்கு 184 டி.எம்.சி தண்ணீரும் வழங்க வேண்டும் என்பது அநீதியான தீர்ப்பாகும்.

ரஜினிக்கு எந்த தகுதியும் இல்லை
நீட் தேர்வால் தமிழகத்தில் ஏழை மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டது. தமிழகத்தை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் திட்டங்கள் குறித்து எவ்வித புரிதலும் இல்லாத ரஜினிகாந்த், அரசியலுக்கு வர எவ்வித தகுதியும் இல்லை. அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த பெண்கள் குறித்து கூறிய கருத்துக்கு பகிங்கரமாக மன்னிப்பு கேட்க வேண்டும். பாண்டியாறு & புன்னம்புழா திட்டம் குறித்து கள ஆய்வு செய்து உண்மை நிலையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை.

திமுவில் முனைப்பு வேண்டும்
பெண் செய்தியாளர்களை தரக்குறைவாக பேசிய எஸ்.வி.சேகரை தமிழக காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். ஆளுநர் ஆய்வு என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது. பிரதமருக்கே கருப்பு கொடி காட்டுவதுடன், இந்தியாவின் இரும்பு பெண்மணி என்றழைக்கப்பட்ட இந்திராகாந்தியையே எதிர்த்த திமுக இந்த விவகாரத்தில் இன்னும் முனைப்போடு செயல்பட வேண்டும் என்றார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications