தீக்குளிப்புகளை கைவிடுக- எந்த நிலையிலும் எதிர்த்துப் போராட வேண்டும்: தமிழக வாழ்வுரிமை கட்சி
தவாக நிர்வாகி ஜெகன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதற்கு அக்கட்சி தலைமை நிலையம் இரங்கல் தெரிவித்துள்ளது.
Recommended Video

கடலூர்: நம்மைத் தாக்கும் எந்த நிலையிலும் நாம் எதிர்த்துப் போராட வேண்டுமே தவிர, தீக்குளிப்பு போன்ற முடிவை எடுக்க வேண்டாம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
தவாக தலைவர் வேல்முருகன் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தீக்குளித்த கட்சி நிர்வாகி ஜெகன் 80% தீக்காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைமை நிலையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பலியானோர், குண்டடிபட்டோரை விசாரிக்கச் சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனை அங்கு செல்லவிடாமல் தூத்துக்குடி விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி சிறைவைத்து, மறுநாள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்டதான பொய்வழக்கில் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

திட்டமிட்டுத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பழிவாங்கப்படுவதையும் சித்திரவதைக்கு ஈடாகத் துன்புறுத்தப்படுவதையும் தாங்கிக்கொள்ள முடியாத மன உளைச்சலில்தான் கடலூர் மாவட்டம், பெரியாண்டிக்குழி நிர்வாகி ஜெகன் தீக்குளித்திருக்கிறார். 80 சதவீத காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.
அவரது இழப்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு அதிர்ச்சியையும் அளவுகடந்த துயரத்தையும் அளிக்கிறது. அவருக்கும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், சுற்றத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! நம்மைத் தாக்கும் எந்த நிலையானாலும் அதனை எதிர்த்துப் போராட வேண்டுமே தவிர, இப்படிப்பட்ட முடிவை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தோழர்கள் யாரும் எடுக்கக் கூடாது என்று கையெடுத்துக் கும்பிட்டு அவர்களைக் கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications