தீக்குளிப்புகளை கைவிடுக- எந்த நிலையிலும் எதிர்த்துப் போராட வேண்டும்: தமிழக வாழ்வுரிமை கட்சி
தவாக நிர்வாகி ஜெகன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதற்கு அக்கட்சி தலைமை நிலையம் இரங்கல் தெரிவித்துள்ளது.
Recommended Video

கடலூர்: நம்மைத் தாக்கும் எந்த நிலையிலும் நாம் எதிர்த்துப் போராட வேண்டுமே தவிர, தீக்குளிப்பு போன்ற முடிவை எடுக்க வேண்டாம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
தவாக தலைவர் வேல்முருகன் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தீக்குளித்த கட்சி நிர்வாகி ஜெகன் 80% தீக்காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைமை நிலையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பலியானோர், குண்டடிபட்டோரை விசாரிக்கச் சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனை அங்கு செல்லவிடாமல் தூத்துக்குடி விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி சிறைவைத்து, மறுநாள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்டதான பொய்வழக்கில் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

திட்டமிட்டுத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பழிவாங்கப்படுவதையும் சித்திரவதைக்கு ஈடாகத் துன்புறுத்தப்படுவதையும் தாங்கிக்கொள்ள முடியாத மன உளைச்சலில்தான் கடலூர் மாவட்டம், பெரியாண்டிக்குழி நிர்வாகி ஜெகன் தீக்குளித்திருக்கிறார். 80 சதவீத காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.
அவரது இழப்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு அதிர்ச்சியையும் அளவுகடந்த துயரத்தையும் அளிக்கிறது. அவருக்கும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், சுற்றத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! நம்மைத் தாக்கும் எந்த நிலையானாலும் அதனை எதிர்த்துப் போராட வேண்டுமே தவிர, இப்படிப்பட்ட முடிவை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தோழர்கள் யாரும் எடுக்கக் கூடாது என்று கையெடுத்துக் கும்பிட்டு அவர்களைக் கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications