உளுந்தூர்பேட்டை சுங்கசாவடி போராட்டம்: வேல்முருகன் உட்பட 267 பேர் விடுதலை - 11 பேர் மீது வழக்கு
உளுந்தூர்பேட்டை சுங்கசாவடி போராட்டத்தில் ஈடுபட்ட வேல்முருகன் விடுதலை செய்யப்பட்டார்.
Recommended Video

விழுப்புரம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உட்பட 267 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்றக்கோரியும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி முன்பு வரிகொடா இயக்க போராட்டம் நடைபெற்றது.

இந்த முற்றுகை போராட்டம் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில், 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதுடன், சுங்கச்சாவடி வசூல் மையங்களையும் அடித்து நொறுக்கினர். இதையடுத்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட வேல்முருகன் உட்பட 28 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, வேல்முருகன் மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்ததை அறிந்த அக்கட்சியினர், உளுந்தூர்பேட்டையில் செல்போன் கோபுரத்தின் மேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் போராட்டக்காரர்கள் சமாதானம் ஆகவில்லை.
அதனால் போலீசார், சுங்கச்சாவடி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 11 பேரை மட்டும் கைது செய்து சிறையில் அடைப்பதாகவும், மற்ற 267 பேரை விடுவிப்பதாகவும் உறுதியளித்தனர். அதன் பேரில் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தியவர்கள் கீழே இறங்கினர்.
இதையடுத்து வேல்முருகன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். சுங்கச்சாவடி தாக்குதலில் ஈடுபட்ட 11 பேர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications