21ம் நூற்றாண்டிலும் இந்தியாவில் பெண்கள் நுகர்வுப் பொருளாகவே பார்க்கப் படுகின்றனர்: வேல்முருகன்
சென்னை: 21ஆம் நூற்றாண்டிலும் கூட இந்தியாவில் பெண்களை ஒரு நுகர்வுப் பொருளாக மட்டுமே பார்க்கிற போக்கு தொடர் கதையாக இருக்கிறது என வேதனை தெரிவித்துள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன்.
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களுக்கு அரசியல் தலைவர்கள் மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள ‘மகளிர் தின' வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. சமூகத்தில் சரிபாதியான மகளிருக்கு இந்நாளில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊதிய உயர்வு, பணி நேரம், வாக்களிப்பு உரிமை என உரிமைசார்ந்த போராட்டங்களின் அடிப்படையில் உருவானதே மகளிர் தினம். இன்னமும் பெண்கள் தங்களுக்கான உரிமை சார்ந்த போராட்டங்களை தொடர வேண்டிய நிலை நீடித்துக் கொண்டிருக்கிறது.
21ஆம் நூற்றாண்டிலும் கூட இந்தியாவில் பெண்களை ஒரு நுகர்வுப் பொருளாக மட்டுமே பார்க்கிற போக்கு தொடர் கதையாக இருக்கிறது. இந்தியாவில் 20 நிமிடத்துக்கு ஒரு பெண் வல்லுறவுக்குள்ளாக்கப்படுவதாக அதிர்ச்சிகரமான ஆய்வுகள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் பெருகிவரும் மது பழக்கத்தால் வல்லுறவு சம்பவங்கள் அதிகரிக்கிற நிலை இருக்கிறது. பெண்களைப் பாதுகாக்க மது விற்பனை என்பதை அடியோடு தடை செய்ய வேண்டியது அவசியம்.
பெண்களை நம்மில் பாதியாக நமக்கு சரி நிகராக கருதி அவர்கள் அனைத்துத் துறைகளிலும் சுயமரியாதையுடன் முன்னேறிட கரம் கொடுப்பதும் கரம் கோர்ப்பதும் அனைவரது கடமையாகும். நம் வாழ்வுரிமை சார்ந்த போராட்ட களங்களில் ஆண்களுக்கு சமமாக பெண்களையும் பங்கேற்கிற நிலைமையை நாம் உருவாக்க வேண்டும் என இன்றைய மகளிர் தின நாளில் உறுதியேற்போம்.
அனைத்து மகளிருக்கும் மீண்டும் என்னுடைய மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications