குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து சசிகலா விரைவில் அறிவிப்பார்: வெற்றிவேல் எம்எல்ஏ!
குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து சசிகலா விரைவில் அறிவிப்பார் என தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து சசிகலா விரைவில் அறிவிப்பார் என தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு ஆதரவு என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததை ஏற்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிமுக அம்மா அணியில் ஏற்பட்டுள்ள மோதலும் குழப்பமும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக அம்மா அணியின் அதிகார மையம் யார் என்ற குழப்பமும் அதிகரித்துள்ளது.
பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவு தருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் அறிவித்தார். ஆனால் ஆதரவு குறித்து பொதுச்செயலாளர்தான் முடிவு செய்வார் என டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

சசிகலா விரைவில் அறிவிப்பார்
இந்நிலையில் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான வெற்றிவேல் எம்எல்ஏ சென்னை அடையாறு இல்லத்தில் டிடிவி தினகரனை இன்று நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்பது குறித்து சசிகலா விரைவில் அறிவிப்பார் என்றார்.

3வது இடத்தில்தான் எடப்பாடி
மேலும் பொதுச்செயலாளர் அறிவிப்புதான் முக்கியமானது என்றும் அவர் கூறினார். கட்சியில் சசிகலா, தினகரனுக்கு அடுத்த இடத்தில் தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

எடப்பாடி அறிவிப்பை ஏற்கமுடியாது
எடப்பாடி பழனிச்சாமி வெறும் அமைப்புச்செயலாளர் தான் என்றும் வெற்றிவேல் எம்எல்ஏ கூறினார். பாஜகவுக்கு ஆதரவு என எடப்பாடி அறிவித்ததை ஏற்க முடியாது என்றும் வெற்றிவேல் எம்எல்ஏ திட்டவட்டமாக தெரிவித்தார்.

உச்சக்கட்ட குழப்பம்
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை பாஜகவுக்கு ஆதரவு என்பது பொதுச்செயலாளர் மற்றும் முதல்வர் சேர்ந்து எடுத்த முடிவு என்று கூறியிருந்தார். இந்நிலையில் வெற்றிவேல் எம்எல்ஏ கூறியிருப்பது, குடியரசுத் தலைவர் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications