"பி.எட். கல்லூரி ஆசிரியர்கள் உருப்படி இல்லாதவர்கள்"- துணைவேந்தர் பேச்சால் சர்ச்சை
சென்னை: தமிழகத்தில் உள்ள பி.எட் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் உருப்படி இல்லாதவர்கள் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கசாமி கூறியுள்ள கருத்து ஆசிரியர்களிடையே சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள பி.எட். கல்லூரிகள் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் கல்வியியலில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் தேசிய ஆசிரியர் கல்விக்குழுவின் விதிமுறைப்படி வரும் கல்வியாண்டு முதல் பி.எட். படிப்புக்கான காலம் இரண்டு ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் இயங்கும் 689 பி.எட் கல்லூரி நிர்வாகங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இடவசதி, ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் உள்ள நிலையில், ஓராண்டு படிப்பே போதும் என கல்வியியல் கல்லூரிகள் தெரிவித்துள்ளன.
இதனிடையே சென்னையிலுள்ள தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தராக தங்கசாமி பொறுப்பேற்றுள்ளார். தமிழகத்தில் உள்ள பிஎட். கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் யாரும் உருப்படி இல்லாதவர்கள் என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தரே இவ்வாறு ஆசிரியர்களை விமர்சித்துள்ளது பி.எட். கல்லூரி ஆசிரியர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications