கொட்டும் மழையில்.. ஆனந்த குளியல்போடும் யானை.. ரசிக்க வைக்கும் 'க்யூட்' வீடியோ..!
தென்காசி: தென்காசியில் கொட்டும் மழையில் யானை ஒன்று ஆனந்தக் குளியல் போடும் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
சங்கரன்கோவில் கோமதியம்மாள் கோவிலில் ஒரு யானை உள்ளது. இந்த கோயிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய பகுதிகளில் அதி கனமழை பெய்து வருகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.

அந்த வகையில் கோமதியம்மாள் கோவிலில் நேற்று கனமழை பெய்து கொண்டிருந்தது. கோயில் இருக்கும் இடத்தில் தண்ணீர் தேங்கியிருந்தபோது அந்த மழையில் ஆனந்தக் குளியல் போட்டது.
தனது தும்பிக்கையால் தண்ணீரை எடுத்து தலையில் வாரி கொட்டியது. தலையை ஆட்டியபடி தண்ணீரை வாரி வாரி ஊற்றி உடலை நனைத்துக் கொண்டது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவுக்கு பேக்கிரவுண்ட் பாடலாக ஆதி படத்தில் வரும் என்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச கொஞ்ச வா மழையே எனும் பாடல் ஒலிக்கப்பட்டது. இந்த பாடலுக்கும் யானையின் ஆடலுக்கும் பார்க்கவே படு சிங்க்காகி இருந்தது. யானையின் செயலை கண்டு பலர் ரசித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications