Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கள்ளத் தொடர்பு கார்த்திக்"... கொந்தளித்த மக்கள் மாநாட்டுக் கட்சி... மீண்டும் உடைந்தது "விடியல்"!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விடியல் கூட்டணி என்று பெயர் வைத்ததற்குப் பதில் பேசாமல் விடியாத கூட்டணி என்று வைத்திருக்கலாம். நடிகர் கார்த்திக் திடீரென உருவாக்கிய இந்த திடீர் கூட்டணி இப்போது 2வது முறையாக உடைந்து கழன்றிருக்கிறது.

யாராலும் சீந்தப்படாமல் போன நிலையில் திடீரென ஒரு நாள் செய்தியாளர்களைச் சந்தித்த அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவரான நடிகர் கார்த்திக், நாங்கள் யாருக்கும் அடிமைகள் அல்ல என்று கூறி ஒரு கூட்டணியை அறிவித்தார். அதன் பெயர்தான் விடியல் கூட்டணி.

நாடாளும் மக்கள் கட்சி, டாக்டர் சேதுராமனின் மூவேந்தர் முன்னணி, மக்கள் மாநாடு கட்சி மற்றும் தமிழ் மக்கள் கட்சி ஆகியவை இணைந்து இந்த விடியல் கூட்டணியாக மலர்ந்தது.

சிங்கம் கூட்டணிக்கு ஜம்ப்

சிங்கம் கூட்டணிக்கு ஜம்ப்

ஆனால் கூட்டணி உருவானதோடு சரி அதன் பிறகு கார்த்திக்கைக் காணோம். இதனால் வெறுப்பாகிப் போன மூவேந்தர் முன்னேற்ற முன்னணி கூட்டணியிலிருந்து விலகி, பார்வர்ட் பிளாக் கட்சியின் கதிரவன் உருவாக்கிய சிங்கம் கூட்டணியில் போய்ச் சேர்ந்து விட்டது.

கவலையே படலையே

கவலையே படலையே

இருப்பினும் இந்த பிளவுக்காக கார்த்திக் கவலையே படவில்லை. மாறாக அவர் பாட்டுக்கு வழக்கம் போல அமைதியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று இன்னொரு முறை உடைந்துள்ளது விடியல் கூட்டணி.

மக்கள் மாநாடும் வெளியேறியது

மக்கள் மாநாடும் வெளியேறியது

மக்கள் மாநாடு கட்சி இன்று விடியலை விட்டு விலகி வந்து விட்டது அக்கட்சியின் தலைவர் சக்திவேல், லோக் ஜனசக்தி கட்சியின் தமிழ்நாடு தலைவர் வித்யாதரன் ஆகியோர் இன்று செய்தியாளர்களைக் கூட்டாக சந்தித்தனர். அப்போது இருவரும் கார்த்திக் குறித்து குமுறித் தள்ளி விட்டனர்.

அமரன் பட இயக்குநர் மூலமாக

அமரன் பட இயக்குநர் மூலமாக

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தேர்தலுக்காக கூட்டணி அமைக்க முடிவு செய்திருந்தபோது கார்த்திக், அமரன் பட இயக்குநர் மூலம் எங்களுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்திருந்தார். நாங்கள் எக்காலத்திலும் நடிகர் காரத்திக்கை தலைமையாக ஏற்க மாட்டோம் என்ற உத்தரவாதத்துடன் கூட்டணிக்கு ஒத்துக்கொண்டனர்.

சேதுராமனின் அறிவிப்புக்கு எதிர்ப்பு

சேதுராமனின் அறிவிப்புக்கு எதிர்ப்பு

மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தையும் கூட்டணியில் இணைத்தார் கார்த்திக். எங்கள் கூட்டணி அமைந்த பிறகு ஒரு நாள் செய்தியார்கள் சந்திப்பு நடந்தது. அப்போது சேதுராமன், நடிகர் கார்த்தியின் தலைமையில் விடியல் கூடடணி தேர்தலை சந்திக்கும் என்று அறிவித்தார்.

தலைவரெல்லாம் முடியாது

தலைவரெல்லாம் முடியாது

அப்போது நாங்கள், தலைவராக ஏற்க முடியாது என்று அறிவித்தோம். ஒருங்கிணைப்பாளராக வேண்டுமானால் ஏற்றுக்கொள்கிறோம் என்றோம். அதன் பிறகு கூட்டணிக்கான எந்த ஆலோசனையும் நடக்கவில்லை. கார்த்திக்கும் ஈடுபடவில்லை.

எஸ்எம்எஸ், வாட்ஸ் ஆப்பில் பதில்

எஸ்எம்எஸ், வாட்ஸ் ஆப்பில் பதில்

கூட்டணி தொடர்பான எந்த ஆலோசனைக்கும், கேள்விக்கும் எப்போதும் வாட்ஸ்அப் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் பதில் சொல்கிறாரர். தனக்கு உலல்நிலை சரியில்லை. மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறுகிறார்.

கள்ளத் தொடர்பில்!

கள்ளத் தொடர்பில்!

இதற்கிடையில் எங்களுடன் ஆலோசிக்காமல் வேறு கட்சிகளுடன் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு வந்துள்ளார். தொகுதி உடன்பாடு பேசாமலேயே வேட்பாளர்களை அறிவித்தார். அதிலும் பாதி பேர் சிவசேனா கட்சியை சேர்ந்தவர்கள். எங்கள் கொள்கைக்கு அப்பாற்பட்டவர்களை நிறுத்தியுள்ளார். இது கூட்டணி துரோகம் என்று குமுறித் தள்ளி விட்டனர்.

முடியலையே ராஜாக்களா, முடியலையே!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+