71ல் பாகிஸ்தானை வென்ற தினம்.. வெற்றி நாயகர்களுக்கு முப்படை தளபதிகள் அஞ்சலி!
சென்னை: 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்ற தினம் விஜய் திவஸ் அதாவது வெற்றி தினமாக நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் முப்படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
1971ம்ஆண்டு நடந்த போரின் இறுதியில் வங்கதேசம் உருவானது. இந்த தினம் வங்கதேசத்தில் சுதந்திர தினமாகவும், இந்தியாவில் வெற்றி தினமாகவும் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

இதில், பாகிஸ்தானுடன் நடந்த போரின்போது உயிர் நீத்த முப்படையினருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆந்திரா-தமிழ்நாடு-கர்நாடகா- கேரளாவுக்கான ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஜக்பீர் சிங், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கடற்படை அதிகாரி கமாடர் அமர் கே.மகாதேவன், தாம்பரம் விமான தளத்தின் ஏர் கமாடர் ரிப்பன் குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், வீரர்கள் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications