விஜயபாஸ்கரை மாற்றும் எண்ணமில்லை... அமைச்சரவையில் மாற்றம் வராது - டிடிவி தினகரன்
விஜயபாஸ்கரை மாற்றும் எண்ணமில்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்லவே தன்னுடைய வீட்டுக்கு அமைச்சர்கள் வந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: அமைச்சர்கள் அனைவரும் தன்னை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து கூறவே வந்தனர். நாங்கள் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தோம் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கரை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஆர்கே நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த சர்ச்சை வெடித்தது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கிய ஆவணங்கள் ஆளும் கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. வருமான வரித்துறையின் விசாரணையில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பலரும் சிக்கினர்.

அமைச்சரவையில் இருந்து விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்தாக வேண்டும் என டெல்லியில் இருந்து நெருக்கடி அதிகரித்தது. இதனால் விஜயபாஸ்கரை ராஜினாமா செய்ய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தினார். ஆனால் விஜயபாஸ்கரோ அதெல்லாம் முடியாது என மறுத்துவிட்டார். அவருக்கு டிடிவி தினகரன் முழு ஆதரவு தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று டிடிவி தினகரன் வீட்டில் திடீர் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் பலரும் டிடிவி தினகரனின் அடையாறு வீட்டிற்கு வந்தனர். லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரையும் இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்த சந்திப்பு குறிப்பு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் இது மரியாதையான சந்திப்புதான் என்றார். அமைச்சர்கள் அனைவரும் புத்தாண்டு வாழ்த்து கூற வந்தனர். நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம் என்றார்.
தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன், அமைச்சர் விஜயபாஸ்கர் பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். விஜயபாஸ்கர் மீது எந்த தவறும் இல்லை என்று என்னை சந்தித்து கூறியுள்ளார். ஐடி ரெய்டு நடத்தப்பட்டதாலே அமைச்சர் பதவி விலக வேண்டியது இல்லை என்றார்.
விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய எந்த ஒரு அமைச்சரும் வலியுறுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமியிடம் விஜயபாஸ்கர் பற்றி பேசவேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.
டாக்டர் அம்பேத்கார் பிறந்தநாள், புத்தாண்டுக்காக அனைவரும் வந்தனர். பல பிரச்சினைகள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம் என்றார். மேலும் அவர், இரட்டை இலை முடக்கத்தில் மத்திய அரசு தலையீடு இருப்பதாக நினைக்கவில்லை.
எந்த விசாரணை நடந்தாலும் எத்தனை சோதனை நடந்தாலும் அமைச்சர்கள் அரசு பற்றி எந்த தவறும் கூறப்போவதில்லை என்றும் அமைச்சரவையில் மாற்றம் எதுவும் வரப்போவதில்லை என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications