வருமானவரித்துறை அத்துமீறல்...மகளை தேர்வுக்கு அனுப்பமுடியவில்லை - விஜயபாஸ்கர் கதறல்
வருமான வரித்துறையினர் அத்துமீறி செயல்படுவதாகவும், தனது மகளை பள்ளிக்குக் கூட அனுப்ப முடியாமல் அதிகாலை 4 மணியில் இருந்து அடைத்து வைத்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: பாதுகாப்பு படையினர், வருமான வரித்துறையினர் அத்துமீறி செயல்படுகின்றனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார். அதிகாலை 4 மணியில் இருந்து தம்மையும் தமது குடும்பத்தினரை அடைத்து வைத்திருப்பதாகவும், மகளை பள்ளிக்கு தேர்வு எழுத கூட அனுப்ப முடியவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
வரி ஏய்ப்பு, ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தொடர்ச்சியாக எழுந்த புகார்கள் உள்ளிட்ட விவகாரங்கள் காரணமாக தமிழகத்தில் இன்று காலை வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லம், அவரது உறவினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு, பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் ரொக்க பணத்தை கைப்பற்றியுள்ளனர்.

அத்துமீறி நுழைந்த அமைச்சர்கள்
வருமான வரித்துறை சோதனை நடைபெறும் கிரீன்வேஸ் சாலையில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் , காமராஜ் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் ஆகிய 3 பேர் அத்துமீறி நுழைந்து பல கேள்விகளை எழுப்பினர்.

விஜயபாஸ்கர் புகார்
விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வெளியே கேட்டில் நின்று முழக்கமிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெளியே வந்த விஜயபாஸ்கர், செய்தியாளர்களிடம் பேசினார். பாதுகாப்பு படையினர், வருமான வரித்துறையினர் அத்துமீறி செயல்படுகின்றனர் என புகார் தெரிவித்தார்.

அனுதாபம் தேட முயற்சி
அதிகாலை 4 மணியில் இருந்து அடைத்து வைத்திருப்பதால் தமது மகளை பள்ளிக்கு அனுப்ப கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மகளை வெளியே கூட்டி வந்து உருக்கமாக பேசி அனுதாபம் தேட முயற்சி செய்தார் விஜயபாஸ்கர். அப்போது அங்கிருந்த பாதுகாப்புப்படையினர் அவரை உள்ளே செல்லக்கூறினர். ஆனால் அவர் மறுத்து விட்டு மீண்டும் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தமது வீட்டில் சோதனை நடத்தப்படுவதாக கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், தம்முடைய வீட்டில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் எதையும் பறிமுதல் செய்யவில்லை என்றும் தெரிவித்தார். தமது மகளைக் கூட அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications