அதிமுகவினரின் வன்முறையை சந்திக்க நாங்க ரெடி... விஜயதாரணி
சென்னை: மது விலக்குப் பிரச்சினையை திசை திருப்ப தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை எதிர்த்துப் போராட்டத்தில் குதித்துள்ளனர் அதிமுகவினர். இதை சந்திக்க காங்கிரஸார் அனைவரும் தயாராக உள்ளோம் என்று தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் விஜயதாரணி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த இளங்கோவன், இது கள்ள சந்திப்பு என்று வர்ணித்திருந்தார். இந்த சம்பவம் நடந்து பல நாட்களுக்குப் பின்னர் திடீரென அதிமுகவினர் திடீர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் உருவபொம்மையை அதிமுகவினர் எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து விஜயதாரணி கூறுகையில், மதுவிலக்கு பிரச்னையை திசை திருப்பவே அதிமுகவினர் இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். இதனால் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு விட்டது.
உடனடியாக இந்த ஆட்சியை அகற்ற வேண்டும். இந்த போராட்டம் மூலம் எங்கள் கட்சி மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது ஆளும் கட்சி. இதனை நாங்கள் சந்திக்க தயாராக உள்ளோம் என்றார் விஜயதாரணி.












Click it and Unblock the Notifications