மகனின் பொள்ளாச்சி ஷூட்டிங்கில் இருந்தபடியே தேர்தல் முடிவுகளை பார்க்கும் விஜயகாந்த்
பொள்ளாச்சி: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்காக பொள்ளாச்சி சென்றவர் அங்கிருந்தபடியே தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ளவிருக்கிறார்.
தமிழக நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து தேமுதிக 14 தொகுதிகளில் போட்டியிட்டது. மேலும் ஆலந்தூர் சட்டசபை தொகுதியில் நடந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட்டது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தேமுதிகவுக்கு சாதகமாக இல்லை. இதனால் தேமுதிகவினர் கவலையில் உள்ளனர்.

ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் என்னவென்றால் தனது இளைய மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் சகாப்தம் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். சகாப்தம் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. இதனால் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக குடும்பத்துடன் பொள்ளாச்சியில் தங்கி படப்பிடிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று நாடாளுமன்ற தேர்தலின்போது பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது என்பதால் விஜயகாந்த் பொள்ளாச்சியில் இருந்து கிளம்பி சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவரோ படப்பிடிப்பை பாதியில் விட்டுவிட்டு வர முடியாது என்று கூறி பொள்ளாச்சியில் இருந்தே தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள தீர்மானித்துள்ளாராம்.












Click it and Unblock the Notifications