லோக்சபா தேர்தல்: மார்ச் 14 முதல் பிரசாரம் செய்ய விஜயகாந்த் ரெடி
சென்னை: நாடாளுமன்ற லோக்சபா தேர்தலுக்காக தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மார்ச் 14ம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். முதல்நாளில் திருவள்ளூர் தொகுதியில் உள்ள கும்மிடிப்பூண்டியில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்தின் பிரசார சுற்றுப்பயண தேதிகள்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் முதற்கட்ட தேர்தல் பிரசாரப் பயணம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வருகின்ற 14 ஆம் தேதி, திருவள்ளூர் தொகுதியில் உள்ள கும்மிடிப்பூண்டியிலும், வடசென்னையிலும் பிரசாரத்தைத் விஜயகாந்த் தொடங்குகிறார்.
அதை தொடர்ந்து 15 ஆம் தேதி வேலூரிலும், 17 ஆம் தேதி ஈரோட்டிலும், 18 ஆம் தேதி கோவையிலும், 20 ஆம் தேதி மதுரையிலும், 21 ஆம் தேதி திருநெல்வேலியிலும், 23 ஆம் தேதி திருச்சியிலும், 26 ஆம் தேதி விழுப்புரத்திலும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு பேச உள்ளதாக தேமுதிக அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications