அம்மாவுக்கு ஆப்பு வைக்க யாராவது வருவாங்க: இப்படி சொன்னது விஜயகாந்த்!
சென்னை: மரண வீட்டிற்கு துக்கம் விசாரிக்க போனாலும் அங்கே ஜெயலலிதாவை திட்டி பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் விஜயகாந்த் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
எங்கு போனாலும் எதையாவது பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது விஜயகாந்தின் வழக்கம். தேர்தல் பிரசாரமோ, ஏதாவது விசேசமோ? எங்கே போனாலும் அவர் என்ன பேசுகிறார் என்று கவனிக்கவே ஒரு கூட்டம் இருக்கிறது போல, அதை அப்படியே பதிவு செய்து யூடுயூப்பில் பதிவேற்றி விடுகின்றனர்.
சமீபத்தில் ராமநாராயணன் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தப் போன விஜயகாந்த், அங்கே பேசிக்கொண்டிருந்த போது, "இந்த அம்மாவுக்கு ஆப்பு வைக்க யாராவது வருவாங்க" என்று பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
இப்படித்தான் விஜயகுமார் மனைவி மஞ்சுளாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்த போனபோது, அனைவருக்கும் ஆழ்ந்த நன்றிகளை.... இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதுக்கும் பேசுறதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம் யோசிங்க கேப்டன்!