ராஜபக்சேவுக்கு வடக்கு மாகாணத் தமிழர்கள் கொடுத்திருப்பது முதல் தோல்வி - விஜயகாந்த்
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
இலங்கை வடக்கு மாகாண தேர்தலில், ஈழத் தமிழர்கள், ஜனநாயகத்தின் மீது தங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை மிகத்தெளிவாக, உணர்த்தி இருக்கின்றனர்.
ஈழத் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தை, புதிய சட்டங்கள் மூலம், ராஜபக்சே கிடைக்காமல் செய்யக்கூடும் என்பதை கருதி, அதற்கு எள் அளவும் இடம் கொடுக்காமல், ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வண்ணம், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி செய்ய வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு, ஈழத் தமிழர்கள் தந்துள்ள இந்த இந்த வெற்றி, போருக்கு பின், ராஜபக்சேவிற்கு கிடைத்த முதல் தோல்வி. இதை புரிந்துகொண்டு, அந்த பகுதியில் இருக்கும் ராணுவத்தை உடனடியாக விலக்கிக்கொண்டு, புதிய ஆட்சியாளர்களுக்கு ராஜபக்சே ஒத்துழைப்பு தருவதுடன், அதிகார பரவலையும் தர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications