பத்ம விபூஷன் விருது ரஜினிகாந்திற்கு அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது: விஜயகாந்த்
சென்னை: மத்திய அரசின் மிக உயரிய விருதான பத்ம விபூஷன் விருதுக்கு தேர்வு பெற்றுள்ள ரஜினிகாந்த்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கூறியுள்ளார்.
சினிமா, கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோரை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு ஆண்டுதோறும் பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. அதில் இந்த ஆண்டுக்கான மிக உயரிய விருதான பத்ம விபூஷன் விருதை அண்ணன் ரஜினிகாந்திற்கு மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

பல்லாண்டு காலம் தமிழ் திரையுலகில் கலை சேவையாற்றி வரும் அண்ணன் ரஜினிகாந்த் மேலும் பல விருதுகளை பெறவும், நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications