உடல்நலக் குறைவு... விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
உடல்நலக் குறைவால் விஜயகாந்த் இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விஜயகாந்த் கடந்த மாதம் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் 15 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார் விஜயகாந்த். கடந்த 2-ந் தேதிதான் மருத்துவமனையில் இருந்து விஜயகாஸ் வீடு திரும்பினார்.
பின்னர் ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் விஜயகாந்த் பிரசாரம் செய்தார். ஆர்கே நகரில் விஜயகாந்த் ஒரு நாள் பிரசாரம் செய்த நிலையில் அத்தொகுதி தேர்தலையே தேர்தல் ஆணணயம் ரத்து செய்தது.
இந்த நிலையில் விஜயகாந்த் இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன விஜயகாந்த் ஓய்வெடுக்காமல் பிரசாரம் செய்ததாலேயே அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.