திமுக கூட்டணியில் சேராமல் வெற்றி வாய்ப்பை விஜயகாந்த் தவறவிட்டுவிட்டார்: ஆதிதமிழர் பேரவை
நாமக்கல்: கருணாநிதியின் கூட்டணி அழைப்பை தேமுதிக தலைவர் விஜயகாந்த் பயன்படுத்த தவறிவிட்டார். தேமுதிக முக்கிய செயலாளர்கள் அத்தணை பேரும் திமுக கூட்டணியை விரும்புபவர்களாகத்தான் இருக்கிறார்கள். எனவே திமுகவுடன் இணைந்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை தேமுதிக நழுவவிட்டுவிட்டது என்று ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் தெரவித்தார்.

ஆதித்தமிழர் பேரவை முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. பிறகு நிருபர்களிடம்
பேரவையின் நிறுவனர் அதியமான் கூறியதாவது:
கடந்தகால கருணாநிதி ஆட்சியில் அவரால் பயன்பெறாத ஒரு சமுதாயம் கூட தமிழ்நாட்டில் கிடையாது. அனைத்து சமுதாயத்தினருக்கும் அவர் ஈடு இணையில்லாத பணியாற்றியுள்ளார். எனவே நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறப்போவது உறுதி.
குறிப்பாக அருந்ததியர் சமூகத்தினரைப் பொறுத்தவரை இதுவரை யாரும் நினைத்திராத வகையில் ஒட்டுமொத்த அருந்ததியர் பிரச்சனைகளை கையிலெடுத்து அவர் வழங்கியதுதான் அருந்ததியினருக்கான மூன்று சதவீத உள் இட ஒதுக்கீடு.
ஒண்டி வீரனுக்கு மணிமண்டபம், தூய்மை தொழிலாளர் நல வாரியம் போன்றவை கருணாநிதி கால ஆட்சி சாதனைகள். எனவே ஆதித்தமிழர் பேரவை திராவிட முன்னேற்ற கழகத்தை முழுமையாக ஆதரித்து வருங்கின்ற சட்டமன்ற தேர்தலில் முன்னணியில் நின்று தேர்தல் பிரச்சார களப்பணியாற்றும்.
கருணாநிதியின் கூட்டணி அழைப்பை தேமுதிக தலைவர் விஜயகாந்த் பயன்படுத்த தவறிவிட்டார். தேமுதிக முக்கிய செயலாளர்கள் அத்தணை பேரும் திமுக கூட்டணியை விரும்புபவர்களாகத்தான் இருக்கிறார்கள். எனவே திமுகவுடன் இணைந்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை தேமுதிக நழுவவிட்டுவிட்டது என்று கருதுகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications