தேமுதிக அலுவலகத்தில் காந்தி, காமராஜர் படத்திற்கு விஜயகாந்த் மலர் தூவி மரியாதை
சென்னை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தியின் படத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் மகாத்மா காந்தியடிகளின் 144வது பிறந்த நாளை முன்னிட்டும், கர்மவீரர் காமராஜர் அவர்களின் 39வது நினைவு நாளை முன்னிட்டும் அவர்களின் திருவுருவப் படத்திற்கு விஜயகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர் பண்ருட்டி எஸ். இராமச்சந்திரன் எம்.எல்.ஏ., பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் ப. பார்த்தசாரதி எம்.எல்.ஏ., கொள்கை பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் எம்.எல்.ஏ., உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பி. கிருஷ்ணமூர்த்தி, சௌகத் ஷெரீப், இளைஞரணி துணை செயலாளர் கு. நல்லதம்பி எம்.எல்.ஏ., தொண்டர் அணி செயலாளர் எஸ். கணேசன், வர்த்தக அணி செயலாளர் எஸ்.எஸ்.எஸ்.யு. சந்திரன், கலை இலக்கிய அணி செயலாளர் பி.ஜி. ராஜ்மோகன், தொழிற்சங்க பேரவை செயலாளர் எம். சௌந்திரபாண்டியன், மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட, கிளை நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.













Click it and Unblock the Notifications