பிரேமலதாவை பிரசாரத்திற்கு அனுப்ப முடியாது... விஜயகாந்த் திடீர் மறுப்பு
சென்னை: உள்ளாட்சி இடைத் தேர்தலில் தேமுதிக சார்பில் வி.சி.சந்திரக்குமார் மற்றும் இளங்கோவன் ஆகிய இருவரை மட்டுமே அனுப்பத் தயாராக இருப்பதாகவும், பிரேமலதாவையெல்லாம் அனுப்ப முடியாது என்றும் விஜயகாந்த் திட்டவட்டமாக கூறி விட்டாராம்.
பிரசாரத்திற்கு பிரேமலதாவை அனுப்பினால் நன்றாக இருக்கும் என்று அவரிடம் பாஜகவினர் கோரிக்கை விடுத்திருந்தனராம். அதற்கு அவர் அதெல்லாம் வேண்டாம். சந்திரகுமார், இளங்கோவன் பிரசாரம் செய்தால் போதும் என்று கூறி விட்டாராம் விஜயகாந்த்.
நேற்று கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் 10வது ஆண்டு விழாவையொட்டி கொடியேற்று விழா நடந்தது. இதில் விஜயகாந்த் கலந்து கொண்டார்.

ஆலோசனை
இந்த கொடியேற்று விழாவில் கலந்து கொண்டு, கொடியேற்றி வைத்து அனைவரும் மிட்டாய் கொடுத்தார் விஜயகாந்த். அதன் பின்னர் கட்சி அலுவலத்தில் உள்ளாட்சி இடைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.

பிரசாரத்திற்கு யாரை அனுப்பலாம்
இந்தக் கூட்டத்தில், உள்ளாட்சி இடைத் தேர்தல் பிரசாரத்திற்கு யாரை அனுப்பலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பிரேமலதா பெஸ்ட்
அப்போது சிலர் பிரேமலதா விஜயகாந்த்தை பிரசாரத்தில் ஈடுபடுத்தினால் நன்றாக இருக்கும் என்று பாஜக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டிப் பேசியுள்ளனர்.

அதெல்லாம் கிடையாது
ஆனால் இது இடைத்தேர்தல்தானே. அதுவும் உள்ளாட்சி இடைத் தேர்தல். எனவே பிரேமலதா தேவையில்லை, சுதீஷ் கூட தேவையில்லை என்று கூறி விட்டாராம் விஜயகாந்த்.

இவங்க மட்டும்தான்
கொறடா வி.சி.சந்திரகுமார், மாநிலப் பொருளாளர் இளங்கோவன் இவர்கள்தான் பிரசாரம் செய்வார்கள். இதற்கு பாஜக சரி என்றால் பிரசாரம் செய்யட்டும். வேண்டாம் என்றால், நமது வேலையைப் பார்ப்போம் என்று கூறி விட்டாராம் விஜயகாந்த்.
-
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்!












Click it and Unblock the Notifications