ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு விஜயகாந்த்தின் "தேங்க்ஸ்கிவிங்"
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு நன்றி கூறியுள்ளார்.
எதற்காக இந்த நன்றி..?
அதுகுறித்த விஜயகாந்த்தின் அறிக்கை இதோ...
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் மேற்கு சென்னை மாவட்ட கழக தொண்டர்கள் பொதுமக்களுக்காக மாநகராட்சி துணை ஆணையரிடம் மனுகொடுக்க சென்றபோது அவர்கள் மீது ஆளும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தலைமையிலான குழு ஒன்று தாக்குதல் நடத்தினர்.
இதில் பாதிக்கப்பட்ட தேமுதிக தொண்டர்களின் மீதே ஆளும் கட்சியினரால் பொய் வழக்கு போடப்பட்டதை கண்டித்தும், அந்த வழக்குகளை வாபஸ் பெறக்கோரியும் ஜனநாயக உரிமை களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
விஜயதாரணி பஞ்சாயத்தால் நொந்து போய்க் கிடக்கும் இளங்கோவனுக்கு விஜயகாந்த்தின் இந்த "தேங்க்ஸ்கிவிங்" ஆறுதலாக இருக்கும் என நம்புவோம்!