ஐடி பணியாளர்களுக்காக குரல் கொடுக்கும் விஜயகாந்த் - லேஆஃப்பை தடுத்து நிறுத்த வலியுறுத்தல்
ஐடி நிறுவனங்களில் இருந்து திடீரென பணிநீக்கப்படும் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதியை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை : தொழில்துறையில் பணிபுரிபவர்களின் வேலைவாய்ப்பை உறுதிபடுத்த தமிழக தொழில்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "ஐடி நிறுவனங்கள் குறைந்த சம்பளம் கொடுத்து அதிக லாபம் சம்பாதித்தாலும், அதில் பணிபுரிபவர்களை திடீர், திடீர் என்று வேலையில் இருந்து நீக்கம் செய்வதால் அவர்களுடைய வாழக்கை கேள்விக்குறியாகி வருகிறது.

தமிழகத்தில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அவர்களின் மெத்தனப் போக்கால் தமிழகத்தில் இருந்து கியா மோட்டார்ஸ் போன்று பல தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டது.
தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் இனிமேலாவது விழித்தெழுந்து உடனடியாக ஐடி துறை மட்டுமல்லாமல் அனைத்து தொழில்துறையில் கவனம் செலுத்தி அதில் பணிபுரிபவர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications