கூட்டணி அமைத்தால் விஜயகாந்த் அறிவி்ப்பார்- பிரேமலதா
மதுரை: கூட்டணி அமைத்தால், அதை முறைப்படி கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மதுரைக்கு நேற்று வந்தார் பிரேமலதா. அப்போது விமான நிலையத்தில் அவரிடம் செய்தியாளர்கள், தேர்தல் கூட்டணி என்னவாயிற்று என்பது குறித்துக் கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த பிரேமலதா,
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? தனித்து போட்டியிடுவதா? என்பது பற்றியும், கூட்டணி அமைத்தால் யாருடன் கூட்டணி என்பது பற்றியும் விஜயகாந்த் அறிவிப்பார்.
ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்த நரேந்திரமோடிக்கு தான் தகுதி இருப்பதாக பாஜக தலைவர் இல.கணேசன் கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து என்றார்.
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த தேமுதிக மாநாட்டில் முதல்வர் மற்றும் அதிகாரிகளை திட்டி பேசியதாக உங்கள் மீதும், விஜயகாந்த் மீதும் அவதூறு வழக்குதொடரப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றார் பிரேமலதா.












Click it and Unblock the Notifications