தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்தான்... அடித்துச் சொல்லும் பிரேமலதா
கரூர்: 2016 சட்டசபைத் தேர்தலை எத்தனை பேர் சந்தித்தாலும் விஜயகாந்த் தான் அடுத்த முதல்வர் என்று தே.மு.தி.க. தலைவர் பிரேமலதா உறுதியாக கூறியுள்ளார்.
கரூர் மாவட்டம் தரகம்பட்டியில் தே.மு.தி.க. சார்பில் நடத்தப்பட்ட 'மக்களுக்காக நான்' என்ற நிகழ்ச்சியில் ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகளை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா வழங்கினர். கூட்டத்தில் பிரேமலதாவின் பேச்சுதான் செம ஹைலைட் என்கின்றனர்.

பினாமி மது ஆலைகள்
தி.மு.க. ஆட்சியில் போட்ட திட்டங்களை அ.தி.மு.க. முடக்குகிறது. அதேபோல், அ.தி.மு.க. போடும் திட்டங்களை தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முடக்குகிறது. ஆனால், தி.மு.க.வால் கொண்டு வரப்பட்ட மதுக்கடையை மட்டும் இரு அரசுகளும் முடக்குவதில்லை. காரணம், தமிழகத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட மது ஆலைகள் இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களின் பினாமிகள் பெயரில்தான் நடத்தப்படுகிறது.

தேமுதிகவிற்கு போட்டி
நாங்கள், மக்களுக்காக நான் என்ற திட்டத்தை தொடங்கியவுடன், தி.மு.க.வில் தமக்குத்தாமே என்ற திட்டத்தை ஸ்டாலின் அறிவித்துவிட்டார். அ.தி.மு.க.வினர் இப்போதே 64,000 பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்கத் தொடங்கிவிட்டனர்.

தமிழக முதல்வர்
அனைவரும் 2016 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டனர். எத்தனை பேர் தேர்தலை சந்தித்தாலும், விஜயகாந்த் தான் அடுத்த முதல்வர். அவர் முதல்வர் பதவியில் அமரும் வரை ஓயமாட்டார் என்று கூறியுள்ளார் பிரேமலதா.

அப்போ கூட்டணி கிடையாது
கடந்த ஒரு வார காலமாகவே பிரேமலதாவின் பேச்சை கவனித்தால், திமுக கூட்டணி உறுதியாக இல்லை என்றே உறுதியாகத் தெரியவந்துள்ளது. ஆனாலும் தேமுதிகவை இணைத்துக்கொண்டால் அதிமுகவை வீழ்த்தி விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறது திமுக. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதம் இருக்கிறது அதற்குள் அரசியல் வானில் என்னென்ன மாற்றங்கள் வருமோ? காத்திருக்கலாம்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications