கூட்டணி பற்றிய முடிவு இனி விஜயகாந்த் கையில்தான்: சலிப்பில் பா.ஜ.க.
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய முடிவு இனி தேமுதிக தலைவர் விஜயகாந்த் கையில்தான் இருக்கிறது என்று பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

பா.ம.க உடனான கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. டெல்லியில் ஆம் ஆத்மியும் காங்கிரஸ் கட்சியும் நடத்தி வந்த நாடகம் முடிவடைந்துவிட்டது.
சிறுபான்மையினர் நலனை காக்க பா.ஜ.க முயற்சித்து வருகிறது. கூட்டணி பற்றி இனி தேமுதிக தலைவர் விஜயகாந்த்தான் முடிவெடுக்க வேண்டும். அவரது கையில்தான் இருக்கிறது.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.












Click it and Unblock the Notifications