விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் எப்போது ? பிரேமலதா விளக்கம்
கோவை: வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பின் 234 தொகுதிகளிலும் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று தேமுதிக மகளிர் அணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
கோவையில் தேமுதிக தேர்தல் பிரச்சார விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த பிரேமலதா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தற்போது தேமுதிகவின் தேர்தல் அறிக்கை விளக்கக்கூட்டம் அனைத்து மாநகராட்சிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட பிரச்சாரம் இன்னும் 5 நாட்களில் முடிவடையும்.

தலைமைக் கழகம் வேட்பாளர் பட்டியல் அறிவித்த பின்னர், விஜயகாந்தும், நானும் 234 தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம்.
தமிழகத்தில் அதிமுக, திமுக அல்லாத லஞ்சம், ஊழலற்ற மாற்று அணியை மக்கள் எதிர்பார்ப்பதால் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருவதாக பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.












Click it and Unblock the Notifications