வெளிநாட்டினரைப் பிடித்து வைத்து சாலை வசதி கோரி போராட்டம் நடத்திய மேகமலை மக்கள்!
தேனி: தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் (மேகமலை) வசித்து வரும் மக்கள், தங்களது நீண்ட நாள் கோரிக்கையை அதிகாரிகள் உடனடியாக நிறைவேற்றக் கோரி இங்கிலாந்து மற்றும் அமெரிக்க சுற்றுலாப் பயணிகளைப் பிடித்து வைத்துப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். பொதுமக்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பிடித்து வைத்தால்தான் பிரச்சினை தீரும் என்ற எண்ணத்தில் இந்த சிறைபிடிப்பு நடந்ததால் சுற்றுலாத் தலமான ஹைவேவிஸ் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தோட்டங்கள் நிறைந்த ஹைவேவிஸ்
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது மேகமலை. இதை ஹைவேவிஸ் என்றும் அழைப்பார்கள் பெரும்பாலும் இங்கு தேயிலைத் தோட்டங்கள்தான் உள்ளன. அனைத்தும் தனியார் தோட்டங்களாகும்.

ஐந்து கிராம மக்களின் தவிப்பு
இங்கு ஐந்து கிராமங்கள் உள்ளன. இங்கு வசித்து வரும் மக்களுக்கு சரியான சாலை வசதி இல்லை. இத்தனைக்கும் கிட்டத்தட்ட 48 கிலோமீட்டர் சாலையை தனியார் தேயிலைத் தோட்டங்கள், அரசிடம் ஒப்படைத்து பல ஆண்டுகளாகி விட்டன. ஆனாலும் அரசு ரோடு போடாமல் உள்ளது.

அரசு பஸ்கள் வர மறுப்பு
ரோடு மகா மோசமாக இருப்பதால் அரசு பஸ்கள் இப்பகுதியில் வரத் தயங்குகின்றன. இதனால் தனியார் பஸ் மட்டும் ஒன்று இயங்கி வருகிறது.

ஒரு வசதியும் கிடையாது
சரியான ரோடு இல்லை. மருத்துவ வசதி கிடையாது. ஆத்திர அவசரத்திற்கு ஒரு மருத்துவ வசதியும் இங்கு கிடையாது. இதனால் ஐந்து கிராம மக்களும் பெரும் சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

எத்தனை போராட்டங்கள்
அடிப்படை வசதிகள் கோரி இந்தப் பகுதி மக்கள் பல போராட்டங்களை நடத்திப் பார்த்து விட்டனர். ஆனாலும் பயன் இல்லை.

பிடிய்யா அந்த வெள்ளைக்காரங்களை
இந்த நிலையில் இங்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த 9 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். கடந்த 2 நாட்களாக இங்கு தங்கி சுற்றுலாவை அனுபவித்தனர். பார்த்தார்கள் மக்கள், இவர்களைப் பிடித்து வைத்து நமது கோரிக்கையை வலியுறுத்தலாம் என்று முடிவு செய்து 9 பேரையும் சிறை பிடித்தனர்.

விரைந்து வந்த போலீஸார்
இதுகுறித்த தகவல் மாவட்ட போலீஸ் எஸ்.பிக்குப் பறந்தது. அதிர்ந்து போன எஸ்.பி, உடனடியாக போலீஸ் படையை அனுப்பி வைத்தார். போலீஸார் விரைந்து வந்து கிராம மக்களுடன் பேசி வெளிநாட்டினரை மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

அதிகாரிகள் பேச்சு
அதன் பின்னர் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் கிராம மக்களுடன் பேசி அவர்களைச் சமாதானப்படுத்தினர்.
வெளிநாட்டினரை சிறை பிடித்து நடந்த போராட்டத்தால் ஹைவேவிஸ் மலையே அதிர்ந்து போனது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications