ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம்.. நாகை அருகே 200 பேர் கைது!

நாகை அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய கிராம மக்கள் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

நாகை: நாகை அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் 22 நாட்கள் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த படாது என மத்திய அரசு உறுதியளித்தது.

Villagers conducting protest against Hydrocarbon project in Nagai

இதையடுத்து நெடுவாசல் கிராம மக்கள் தங்களின் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர். அந்த கேப்பில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கடந்த திங்கட் கிழமை மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நாகை மாவட்டம் மேலக்குருவாடியில் 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கைகளில் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஓஎன்ஜிசி ஆழ்துளை கிணறு அருகே போராட்டம் நடத்திய கிராம மக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர். இதையடுத்து போரட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+