ஆற்றில் மணல் அள்ள வந்தவர்களை தோப்புக்கரணம் போடச்சொல்லி தண்டனை கொடுத்த பொதுமக்கள்!
கடலூர் வெள்ளாற்றில் மணல் அள்ள வந்தவர்களை கிராம மக்கள் சிறை பிடித்து, தண்டனையாக தோப்புக்கரணம் போட வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
கடலூர்: ஆற்றில் மணல் அள்ள வந்தவர்களை சிறை பிடித்த மக்கள் அவர்களை தோப்புக் கரணம் போட வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் ஆற்றில் வெள்ளாற்றில் மணல் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. அதனால் மாவட்ட நிர்வாகம், வெள்ளாற்றின் கரைகளில் மணல் எடுப்பவர்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் அருகில் இருக்கும் அரியலூர் மாவட்டத்திலிருந்து தினமும் 100க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளப்பட்டு வந்தது.
அதனையடுத்து இன்று காலை அங்கு மணல் அள்ள வந்த 30க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளை கிராம மக்கள் சிறைபிடித்தனர். மேலும், மணல் அள்ள வந்தவர்களுக்கு தண்டனையாக தோப்புகரணம் போட வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications