வேட்டையாடு, விளையாடு:

Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக மேலும் மாரீஸ்வரன் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

மாணவன் பாஸ்கரனுடன் எனக்கு நல்ல பழக்கம் இருந்தது. தன் பாலின சேர்க்கை தொடர்பும் உண்டு. அவனுடன் நெருங்கி பழகியதால் ‘வேட்டையாடு விளையாடு' சினிமா போல அவனது பெயரை நான் பச்சை குத்திக் கொண்டேன். இருவரும் வெளியூருக்கும் சென்று வந்தோம். இந்த நிலையில் இந்த உறவு ஊருக்குள் தெரிந்ததும், என்னுடன் பழகுவதை பாஸ்கரன் குறைத்தான். பழைய செயல்களுக்கும் மறுத்தான். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் போலீசிலும் புகார் செய்யப்பட்டது. இதனால் மேலும் அதிர்ச்சிக்குள்ளான நான், ஆத்திரத்தில் பாஸ்கரனை கத்தியால் குத்தி கொலை செய்தேன். என்னுடன் மில்லில் வேலை பார்த்த மகேஸ்வரனுடன் சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு வந்து கொலைக்கு திட்டம் வகுத்தேன். அதன்படி வகுப்பறைக்குள் புகுந்து, பாஸ்கரனை கொலை செய்துவிட்டு, தயாராக நின்ற மகேஸ்வரனுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டேன். இந்த நிலையில் மகேஸ்வரனை பிடித்த போலீசார் அவன் மூலம் என்னை கைது செய்துவிட்டனர்' என இவ்வாறு மாரீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உண்மையிலேயே மாரீஸ்வரனின் கையில் பாஸ்கரன் பெயர் பச்சை குத்தப்பட்டுள்ளது. எனவே, பாஸ்கரனுக்கும் ஓரினச் சேர்க்கையில் தொடர்பு இருந்ததா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+