‘வேட்டையாடு விளையாடு’ போல் பழகினோம்... பள்ளி மாணவர் கொலை வழக்கில் கைதானவர் வாக்குமூலம்!
கோவை: அருப்புக் கோட்டை அருகே பள்ளி வளாகத்தில் 8ம் வகுப்பு மாணவர் ஒருவர் கொலை செய்யப் பட்ட விவகாரத்தில், ‘ஓரினச் சேர்க்கைக்கு இணங்காததால் கொலை செய்ததாக' கைது செய்யப் பட்ட முன்னாள் மாணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ளது பந்தல்குடி. இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் பாஸ்கரன், கடந்த வெள்ளியன்று வகுப்பறைக்குள் முன்னாள் மாணவர் மாரீசுவரனால் கொலை செய்யப்பட்டார்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் ஓரினச் சேர்க்கை விவகாரமே கொலைக்கான காரணம் எனக் கண்டுபிடித்தனர். மேலும், கொலையாளி மாரீஸ்வரன் தப்பிச் செல்ல, அவருடன் மில்லில் வேலை பார்த்த தமிழ்பாடியை சேர்ந்த மகேஸ்வரன் என்பது உதவியது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து மகேஸ்வரனைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாரீஸ்வரன் கோவை அருகே இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.
உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார், சகோதரி வீட்டில் பதுங்கி இருந்த மாரீஸ்வரனைக் கைது செய்தனர். பின்னர், போலீசாரிடம் மாரீஸ்வரன் அளித்த வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.