கொலை மிரட்டல் விவகாரம்... பாதுகாப்பு கேட்டு நடிகர் விஷால் போலீசில் புகார்
சென்னை: தனக்கு கொலை மிரட்டல் வருவதால் தனக்கும் தனது அலுவலகத்திற்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நடிகர் விஷால் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
நடிகர் சங்கத் தேர்தல் தற்போது பரபரப்பான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும், விஷால் தலைமையில் இன்னொரு அணியினரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
வருகிற 18-ந்தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடக்கிறது, இதனையொட்டி விஷால் தலைமையிலான அணியினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஷாலின் மொபைலிற்கு தேவையில்லாத எண்களில் இருந்து போன் கால்கள் வருவதாக அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
அந்த புகார் மனுவில் "நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் எனக்கு தேவையில்லாத எண்களில் இருந்து போன் செய்து பேசும் சிலர் மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே எனது வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்று விஷால் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் சரத்குமார் எழும்பூர் கோர்ட்டில் நடிகர் விஷால் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications