நெடுவாசலை காப்பாற்றுங்கள்.. விஷால் உருக்கமான வேண்டுகோள்
சென்னை: விவசாயிகளைக் காப்பாற்றுங்கள், நெடுவாசலைக் காப்பாற்றுங்கள் என்று நடிகர் விஷால் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் செவ்வாய்கிழமை விஜய்சங்கர் இயக்கத்தில் உருவான 'ஒரு கனவு போல' படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்று விஷால் பேசுகையில். ''விவசாயிகளைக் காப்பாற்றுங்கள், நெடுவாசலைக் காப்பாற்றுங்கள். அரசியல்வாதிகளுக்கு நான் இதை முக்கிய வேண்டுகோளாக முன்வைக்கிறேன்.

என் அலுவலகத்தில் நெடுவாசல் விவசாயிகள் எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் நான் அந்த விவசாயிகளுடன் இணைந்து நெடுவாசல் புறப்படுகிறேன். இன்று முதல் நெடுவாசலில் மக்களோடு மக்களாக இணைந்து என் ஆதரவைத் தெரிவிக்க உள்ளேன்'' என்று விஷால் பேசினார்.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது எனவும், கருவேல மரங்களை அகற்றும் பணியில் பொதுமக்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும் எனவும் விஷால் கோரிக்கை விடுத்திருந்தார்.












Click it and Unblock the Notifications