தற்கொலை முடிவைத் தேடிய டிஎஸ்பி. விஷ்ணுப்பிரியா உடல் சொந்த ஊர் வந்தது... இன்று இறுதிச்சடங்கு
Subscribe to Oneindia Tamil
கடலூர் : தற்கொலை செய்துகொண்ட டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியாவின் உடல் கடலூர் கொண்டுவரப்பட்டது. இன்று (ஞாயிற்றுக் கிழமை) அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.
திருச்செங்கோட்டில் தற்கொலை செய்து கொண்ட டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் உடல், ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு, அவரது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் கோண்டூர் கிராமத்திற்கு நேற்று இரவு 8.00 மணிக்கு கொண்டு வரப்பட்டது.

கோண்டூர் தமிழ்முத்து நகரில் உள்ள அவரது வீட்டில் விஷ்ணுபிரியாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை பார்த்து குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதனர்.
அங்கு சோகமே உருவாக அமர்ந்திருந்த அவருடைய தந்தை ரவிக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினார்கள். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications