வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்றும் விவேக், கிருஷ்ணப்பிரியாவிடம் விசாரணை
சசிகலா உறவினர்களான விவேக், கிருஷ்ணபிரியா, டாக்டர் வெங்கடேஷ் இன்று வருமான வரித்துறை அலுவகத்தில் ஆஜராக உள்ளனர்.
சென்னை: வருமான வரித்துறை அலுவலகத்தில் இளவரசி மகன் விவேக் இன்றும் ஆஜராகிறார். அவரிடம் ஜாஸ் சினிமாஸ் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
சசிகலாவின் அண்ணன் மகனான விவேக், ஜெயா டிவி மற்றும் ஜாஸ் சினிமாஸை நிர்வகித்து வருகிறார். சத்யம் குழுமத்திடம் இருந்து ஜாஸ் சினிமாஸை ரூ1,000 கோடிக்கு சசிகலா குடும்பம் வாங்கியதாக சர்ச்சை எழுந்திருந்தது.

தற்போதைய வருமான வரி சோதனையிலும் ஜாஸ் சினிமாஸ் தொடர்பான ஏராளமான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அத்துடன் ஜாஸ் சினிமாஸ் குத்தகைக்கு எடுக்கப்பட்டதா? அல்லது வாங்கப்பட்டதா? என்பது குறித்து விரிவான ஆவணங்களைத் தாக்கல் செய்யவும் விவேக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.
மேலும் ஜாஸ் சினிமாஸ் தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய சத்யம் சினிமாஸ் நிறுவனத்துக்கும் வருமான வரித்துறையினர் உத்தரவிட்டிருந்தனர். இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஜாஸ் சினிமாஸ் தொடர்பாக விவேக்கிடம் விசாரணை நடைபெற உள்ளது.
விவேக்கின் சகோதரி கிருஷ்ணப்பிரியா, உறவினர் டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரையும் இன்று ஆஜராக வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
சசிகலா உறவினர்களான விவேக், கிருஷ்ணபிரியா, டாக்டர் வெங்கடேஷ் இன்று வருமான வரித்துறை அலுவகத்தில் ஆஜராக உள்ளனர்.












Click it and Unblock the Notifications